திருவாடானை : கோயில் விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.திருவாடானை தெற்குரதவீதி முத்துமாரியம்மன்கோயிலில் திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் கோயில் முன் பொங்கல்வைத்து தரிசனம் செய்தனர். அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம்,சந்தனம், குங்குமம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.