மயிலம் : மயிலம் வள்ளி தெய்வானை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.