பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியலில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 101 ரூபாய் காணிக்கை இருந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், ஆன்மிக இறை அன்பர்கள் முன்னிலையில் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம்.ஆனால் முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் தலைமையில், கோவில் ஊழியர்களை வைத்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 2 லட்சத்து 79 ஆயிரத்து 101 ரூபாய் காணிக்கை இருந்தது.