Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னுார் பகுதியில் பழங்கால ... கோவர்த்தனகிரி அலங்காரத்தில் சவுந்தரராஜப் பெருமாள் கோவர்த்தனகிரி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்க குழு; அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்க குழு; அறநிலையத்துறை

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
12:07

 கோவை: ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக நன்செய், புண்செய் நிலங்கள் மட்டுமின்றி வர்த்தக கட்டடங்கள், வீடுகள், மனையிடங்கள் உள்ளன. வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வரும் குத்தகைதாரர்கள், நியாயமான வாடகை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். பலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக, மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், உதவி கமிஷனர்கள் தலைமையில் மூன்று குழுக்கள் உருவாக்கியுள்ளார்.

இத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் இதுவரை அதிகாரிகளை சரிக்கட்டியும், அரசியல்வாதிகளை பயன்படுத்தி சமாளித்து வந்தனர். ஆக்கிரமிப்பு நிலங்களை தங்களுக்கு சொந்தமானதாக பயன்படுத்தி வந்தனர். இனி, அது நடக்காது. ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை எப்போது, எந்த அதிகாரி அகற்றுவார், எந்த அதிகாரி கோப்புகளை பார்க்கிறார் போன்ற விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புதாரருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி, பதில் பெறப்படுகிறது. அதன் பின்பே, ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என்றனர். சமீபத்தில் ஆய்வுக்கு வந்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், மருதமலை அடிவாரத்தில், சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் மாநகராட்சி எல்லையில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக, தி.மு.க.,வினர் புகார் கூறினர். இதுதொடர்பாக, சர்வே எடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க, அமைச்சர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம், சோமையம்பாளையம் ஊராட்சி, கோவை மாநகராட்சி மற்றும் மருதமலை கோவில் என மூன்று பிரிவினருக்கு பாத்தியப்பட்டதாக இருக்கிறது. நில அளவைத்துறை மூலமாக ஆய்வு செய்து, எந்த துறைக்குச் சொந்தமானது என இறுதி செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar