தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நடுத்தெரு முத்துமாரியம்மன் கோவில், முளைப்பாரி விழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் முளைப்பாரிகளை கோவிலில் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். கோவிலில் இருந்து நேற்று முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்து நீரில் கொட்டி பக்தர்கள் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.