உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரியில் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவம் விழா நடந்தது. கடந்த ஜூலை 18 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று மாலை களரி ஊரணியில் முளைப்பாரியை கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.