Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கலசாபிஷேகம் நிகழ்ச்சிகள் ... கோதண்டராம சுவாமி கோயிலில் ஆனி உற்சவ விழா! கோதண்டராம சுவாமி கோயிலில் ஆனி உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரப் பிரகாரமாகி ஜொலிக்க போகிறது ராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
10:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் மூன்றாம் பிரகாரம், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல், முழுவதும் பல வர்ணங்கள் அடங்கிய சித்திர பிரகாரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம், ராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி காலத்தில் துவங்கி, 1794ல் முத்துராமலிங்க சேதுபதியால் கட்டி முடிக்கப்பட்டது. நீளமான பிரகாரத்தில் உள்ள தூண்களின் அமைப்பு, நடைபாதையின் இருபுறமும் உள்ள திண்ணைக்குறடுகள், தூண்களுக்கு இடையே அமைந்துள்ள புராணக்கதைகளை செல்லும் சுதை சிற்பங்களால் உலகப்பிரசித்தி பெற்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பலவர்ண சித்திரங்கள், சித்திர தூண்கள் அடங்கிய பிரகாரமாக விளங்கி வந்தது. நாளடைவில், தூண்களில் இருந்த சிற்பவேலைப்பாடுகள் சேதமடைந்தன. கடந்த 1975 கும்பாபிஷேகத்தின் போது, சுதை சிற்பங்கள் அகற்றப்பட்டு சிமென்ட் கலவையால் பூசப்பட்டு, சாதாரண தூண்களாக மாறியது. தற்போது இந்த பிரகாரத்தில் சேதமடைந்த கமலம் பெயின்டிங் பணிகள் துவங்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வரும் நிலையில், பிரகாரத்திலுள்ள சுதை சிற்பங்களை சீரமைத்து, முன்பு போல் சித்திரப்பிரகாரமாக மாற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, 50 லட்ச ரூபாயில் பிரகாரத்திலுள்ள தூண்கள், பக்கவாட்டில் உள்ள சிற்பங்களுக்கு பல வர்ணங்களில் பெயின்ட் பூசப்பட்டு வருகிறது.

தேர்களுக்கு இரும்பு சக்கரங்கள்: ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் எழுந்தருள இரண்டு பெரிய மரத்தேர்களும், சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேசுவரர் உலா வர மூன்று சிறிய மரத்தேர்களும் கோயிலில் உள்ளது. சேதுபதி மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்ட இத்தேர்களின் மரச்சக்கரங்களில் தேய்மானம் அதிகமானதால், இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக, திருச்சி பெல் நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாயில், 20 சக்கரங்கள் தயாரிக்கப்பட்டு, நேற்று ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டன. ஆடித்திருவிழாவிற்கு முன் மூன்று சிறிய தேர்களுக்கும், விழா முடிந்த பின் சுவாமி, அம்பாள் பெரிய தேர்களுக்கும் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar