சாயல்குடி: ஆடி சனிக்கிழமையை முன்னிட்டு சாயல்குடி பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பேரூராட்சி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் வெண்ணை காப்பு சாத்தப்படும், வெற்றிலை மாலையில் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.