Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... திருவண்ணாமலை கோவில்களில் பக்தர்களுக்கு தடை திருவண்ணாமலை கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1200 ஆண்டுகளுக்கு முந்தைய நிசம்பசூதனி சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
1200 ஆண்டுகளுக்கு முந்தைய நிசம்பசூதனி சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
12:08

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கமுதி மேலராமநதி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தினர் மேற்கொண்ட ஆய்வில் கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்த நிசம்ப சூதனி சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆய்வாளர் செல்வம் கூறியதாவது: ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் அருப்புக்கோட்டை எல்லைப்பகுதியான கமுதி மேலராமநதி கிராமத்தில் இச்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் மங்கம்மாள் பெருவழிச் சாலை என அழைக்கப்பட்ட இவ்வழியில் யாத்திரீகர்கள் பயணித்து இங்குள்ள ராமநதி எனும் நீரோடையில் நீராடி நிசம்பசூதனி அம்மனை வழிபட்டிருக்கலாம். தற்போது இக்கிராமத்தினர் வாழவந்தம்மன் என வணங்கி வந்துள்ளனர், என்றார்.மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன்: நிசம்பசூதனி தலையில் கேசபாரம், மார்பில் நாக கூச்சபந்தம் அணிந்து எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.

கைகளில் திரிசூலம், உடுக்கை, கேடயம், மணி ஏந்தியுள்ளார். சில ஆயுதங்கள் தெரியவில்லை. உத்குடிகாசனத்தில் பத்ர பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். கழுத்தில் கந்தி, மாலை என அணிகலன்களும், இடுப்பில் மேகலை, பட்டாடையும் அணிந்திருப்பது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.நிசம்பன் எனும் அரக்கனை வதம் செய்யும் நிலையில் உள்ளதால் நிசம்பசூதனி என அழைக்கின்றனர். இதே போன்ற சிலைகள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துறைக்காடு பகுதிகளில் கிடைத்துள்ளது. இதன் காலம் 8ம் நுாற்றாண்டு. காளி நிசம்பனை வென்றதால் அதன் நினைவாக இந்த தெய்வத்தை வழிபடும் மரபு 8ம் நுாற்றாண்டி இருந்து தொடர்ந்து இருந்துள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar