பதிவு செய்த நாள்
02
ஆக
2021
05:08
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், தற்போது நிலவி வரும் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் கோவில்களில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
ஆடி கிருத்திகையான இன்று, ஆடிப்பெருக்கு பண்டிகையான நாளை மற்றும் வரும் ஆடி அமாவாசையான 8ம் தேதி என, மூன்று நாட்களில் கோவில்களில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், தொற்று பரவாமல் தடுக்க, மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கோவில்களில் சுவாமிக்கு பூஜைகள் தொடர்ந்து நடக்கும்.அதில், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் ஆகியவை கிருத்திகை, ஆடிப்பெருக்கு மற்றும் அமாவாசை என, மூன்று நாட்களும் பக்தர்கள் தரிசனம் கிடையாது.
அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், முத்துார் செல்வகுமாரசாமி கோவில்.முத்துார் அத்தனுாரம்மன் மற்றும் குப்பியண்ணசுவாமி கோவில், மூலனுார் வஞ்சியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் நாட்ராயசுவாமி கோவில், வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில், மணலுார் செல்லாண்டியம்மன் கோவில், வள்ளியரச்சல் அழகு நாச்சியம்மன் கோவில்.கருவலுார் மாரியம்மன் கோவில், வெள்ளியம்பதி பத்ரகாளியம்மன் கோவில், தாராபுரம் அனுமந்தராயசுவாமி கோவில், பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவில், கொடுமணல் தங்கம்மன் கோவில், ஊத்துக்குளி வெற்றி வேலாயுதசாமி கோவில்.திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப்பெருமாள் கோவில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில் மற்றும் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் ஆகியவை, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை நாட்களில் பக்தர்கள் தரிசனம் கிடையாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.