பதிவு செய்த நாள்
02
ஆக
2021
05:08
அரூர்: அரூர் அடுத்த, தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். தீர்த்த கிரீஸ்வரர், வடிவாம்பிகையை தரிசிக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி செல்வர். இந்நிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 10 லட்சத்து, 67 ஆயிரத்து, 581 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.