உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில், சிவபெருமானுக்கு உகந்த, ‘சாவன் ’ மாதம், கடந்த 25ம் தேதி துவங்கியது. மாதத்தின் இரண்டாம் சோம வாரமான நேற்று, வாரணாசி, காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.