அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர். அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். எனினும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
பழமையான, பெரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர். கதவுகரை பகவதி அம்மன் கோவில், எல்லப்பாளையம் அம்மன் கோவில் மற்றும் அல்லிகுளம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட ஊர்களில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திரளான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள அருந்த செல்லி அம்மன் சன்னதி, அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட கோவில்களில் முன்புறம் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். அன்னை ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.