முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் சுவாமிக்கு நாளை லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2021 04:08
புதுச்சேரி : முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்சார்ச்சனை நாளை நடக்கிறது.
முத்தியால்பேட்டை எம்.எஸ்., அக்ரஹாரத்தில் வீர ஆஞ்சநேய கோதண்ட ராமர் கோவில் உள்ளது.ஆடி அம்மாவாசையை முன்னிட்டு, இங்குள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்சார்ச்சனை நாளை காலை 7.30 முதல் இரவு 7.30 மணி வரை நடக்கிறது.லட்சார்ச்சனையில் பொதுமக்கள் பங்கேற்கலாம். ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கைங்கர்ய சபா நிர்வாகிகள் செய்துள்ளனர்.