சூலூர்: ஆடிப்பூரத்தை ஒட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஆடிப்பூர நட்சத்திரத்தை ஒட்டி, அம்மன் கோவில்கள், பெருமாள் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று நடந்தன. சூலூர் சிவன், பெருமாள் கோவில், சின்னியம் பாளையம் கணபதீஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் கோவில் மற்றும் சூலூர் சுற்று வட்டார கோவில்களில் நடந்த பூஜையில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பெண்களுக்கு மஞ்சள் சரடுகள் வழங்கப்பட்டன.