திருப்புல்லாணி கோயிலில் பக்தர்களின்றி ஆடிப்பூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2021 05:08
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. கோயிலில் பக்தர்களின்றி ஆடிப்பூர விழா நடந்தது.