ஆண்டிபட்டி: சக்கம்பட்டியில் சீலக்காரி அம்மன், அய்யனார் குல தெய்வ வழிபாடு நடந்தது.மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்து கோயில் வளாகத்தில் கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை நடத்தினர். சீலக்காரி அம்மன், அய்யனார், கருப்பசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நள்ளிரவில் படையில் செய்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் பெருமாள், மாரிமுத்து, சுரேஷ், சென்றாயன் முன்னிலையில் விழாக்கமிட்டியினர் செய்தனர்.