Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூத்துக்குடி பெருமாள் கோயில் ... பிரச்னைகள் வெளியில் இருந்து வருவதில்லை: அனைத்திற்கும் மனமே பிரதானம் பிரச்னைகள் வெளியில் இருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2012
10:06

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மோற்சவம், செப்., 18 முதல் 26ம் தேதி வரையிலும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம், அக்., 15 முதல் 23ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. திருமலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பிரம்மோற்சவ விழாவுக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரண்டு பிரம்மோற்சவ விழாக்களையும் சிறப்பாக நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார்.

பக்தர்களின் தலைமுடி ஏலம்: ரூ. 61.72 கோடி வருமானம்

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை ஏலம் விட்டதில், தேவஸ்தான நிர்வாகத்திற்கு, 61 கோடியே 72 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. இதுவரை சேகரிக்கப்பட்டிருந்த, 89 டன், 413 கிலோ தலைமுடியை தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் இணையதளம் மூலம் ஏலம் விட்டது. இந்த தலைமுடி, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என, தரம் பிரிக்கப்பட்டது. இவற்றில், வெள்ளை முடியும் சேர்ந்துள்ளது. இவற்றில், 16 முதல், 30 அங்குல நீளம் உள்ள தலைமுடி, இரண்டாம் தரமாக ஏலம் விடப்பட்டது. இதில், 28 ஆயிரத்து 700 கிலோ விற்பனையானது. இதன் மூலம், 53 கோடியே 54 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. மூன்றாவது ரகம், 8 ஆயிரத்து 300 கிலோ அளவுக்கு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம், 6 கோடியே 18 லட்ச ரூபாயும், நான்காவது ரகம், 1,717 கிலோ விற்பனையானதன் மூலம், 93 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும், வருமானம் கிடைத்தது. ஐந்தாவது ரகம், 50 ஆயிரம் கிலோ விற்பனை செய்யப்பட்டதில், 40 லட்ச ரூபாயும், வெள்ளை முடி விற்பனை மூலம், 65 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயும் வருமானமாக கிடைத்தது. இவ்வாறு மொத்தம், 61 கோடியே 72 லட்ச ரூபாய் தலைமுடி ஏலத்தின் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar