சின்னாளபட்டி: சின்னாளபட்டி பாலநாகம்மன் கோயிலில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள், பொங்கல் படையலுடன் வழிபாடு நடத்தினர்.
* சமயபுரம் மாரியம்மன் கோயில், பாரதி நகர் மாரியம்மன் கோயில், அம்பாத்துறை பத்ரகாளி அம்மன் கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், வரலட்சுமி விரத சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.