Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகாளி அம்மன் கோயிலில் சிறப்பு ... காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாவீரரை காளியம்மனாக வழிபட்ட மக்கள்
எழுத்தின் அளவு:
மகாவீரரை காளியம்மனாக வழிபட்ட மக்கள்

பதிவு செய்த நாள்

28 ஆக
2021
05:08

கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம்  மணக்குடியில் சமண தீர்த்தங்கரர் மகாவீரரை காளியம்மனாக நினைத்து மக்கள் வழிபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடியில் பாலாறு செல்கிறது. அக்கிராமத்தின் பாலாற்றுக் கரையில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிலையை அப்பகுதியினர் காளியம்மனாக நினைத்து கூடம் அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.

கார்த்திகை மாதத்தில் சொக்கப்பன் கொளுத்தியும்  வழிபாடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் ஆய்வு செய்த மதுரை சமண தொல்லியல் சின்ன பாதுகாப்பு மையத்தினர் மணக்குடி மக்கள் வழிபட்டு வந்த சிற்பம் ‛மகாவீரர்’ என்பதை அறிவித்தனர். இதனையடுத்து அங்கு அதற்கான அறிவிப்பு பலகையையும் நிறுவிச் சென்றனர். இது குறித்து அம்மையத்தினர் கூறுகையில்,‛ இப்பகுதியில் சமண மதம் பரவியிருந்தது. இங்கு சமணச்சின்னங்களாக கோயிலாப்பட்டி தீர்த்தங்கரர், குன்றக்குடி மலையடிவார படுகைகள், பூலாங்குறிச்சி மலை சிற்பங்கள் என்று பல இடங்களில் உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய புலவரான கணியன் பூங்குன்றனாரும் சமணரே. அதில் தற்போது மணக்குடி தீர்த்தங்கரர் சிற்பமும் ஒன்று என்றனர். தற்போது மணக்குடியில் உள்ளது 24 வது தீர்த்தங்கரர் எனப்படும் மகாவீரர் சிற்பம்.  9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் ஒரே பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 அடி உயரமுள்ள இந்த சிற்பத்தில் மகாவீரரின் பரிவார தேவதைகளாக யட்சன் மற்றும் யட்சினியும் இருபுறமும் உள்ளனர். தொங்கிய காதுகளுடன் கூடிய உருவத்தை வைத்து பெண் தெய்வமாக நினைத்து வழிபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar