Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோயிலில் வராகி ... பாலமுருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை வழிபாடு பாலமுருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்த விநாயகர் சதுர்த்திக்கு நீங்களே சிலை செய்து கொண்டாடலாம்
எழுத்தின் அளவு:
இந்த விநாயகர் சதுர்த்திக்கு நீங்களே சிலை செய்து கொண்டாடலாம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2021
01:08

கோவை: இந்த விநாயகர் சதுர்த்தியை இயற்கைக்கு உகந்த முறையில் கொண்டாடும் வகையில் மேக் யுவர் ஒன் கணேஷா என்ற புது முறையை சோ அவேர் என்ற தன்னார்வலர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டிக், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பெயிண்ட், மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பல வண்ணங்களில், பல அளவில் விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பல மக்காத பொருட்களை பயன்படுத்தி சிலை செய்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள சோ அவேர் என்ற தன்னார்வ நிறுவனம் விதை விநாயகர் சிலைகளை அறிமுகம் செய்தது. அதன்மூலம் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் விதைகளை வைத்து சிலை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இதில் புதுமையை புகுத்த, நம் கைகளால் சிலையை வடிவமைக்கும் வகையில் மேக் யுவர் ஓன் கணேசா என்ற பெயரில் சிலை செய்வதற்கான கிட் விற்பனை செய்கின்றனர். இந்த கிட்ல் விநாயகர் சிலை செய்வதற்காக, இரண்டரை கிலோ களிமண், சிலை வைப்பதற்கான பலகை, வண்ணம் தீட்ட பிரஸ், நூல், காட்டன் துணி, காகிதப்பூ, சிலை வடிவமைக்கப் தேவையான மரத்தால் ஆன பொருட்கள் அடங்கிய தொகுப்பை, 299 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன. இதில் வீட்டில் விளைவிக்கக்கூடிய வெண்டைக்காய், தக்காளி, கத்தரிக்காய், துளசி, மிளகாய் உள்ளிட்ட விதைகளை வைத்து வழங்குகின்றன.

இந்த கிட்ட வைத்து அவரவரின் சொந்த படைப்பாற்றலால் சிலைகளை உருவாக்கலாம். சிலைகளை வழிபட்ட பின்னர் வீட்டு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்தால், ஒரு சில நாட்களில் செடி முளைக்க ஆரம்பித்து விடும். வீடுகளில் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து சிலை செய்து இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியாக கொண்டாட நல்ல ஒரு வாய்ப்பு. மேலும் களிமண்ணால் ஆன, 4 இன்ச் முதல் இரண்டரை அடி வரையான விதை விநாயகர் சிலைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; ‘‘காலமும் வரலாறும் இருக்கும் வரை, செம்பை வைத்தியநாத பாகவதரின் இனிமையான குரல் எதிரொலிக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar