Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யமுனா நதிக்கரையில்... ருக்மணி பூஜித்த கிருஷ்ணர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெள்ளிக்காப்பு காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
10:08


மகான் நாராயண தீர்த்தருக்கு கிருஷ்ணராக காட்சியளித்த பெருமாள் தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் குடியிருக்கிறார். குழந்தை வரம் பெற இவருக்கு வெள்ளிக்காப்பு காணிக்கை செலுத்துகின்றனர்.    
நாராயணதீர்த்தர் என்னும் மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். கனவில் தோன்றிய பெருமாள், ‘‘காலை எழுந்ததும் யார் உன் கண்ணில் படுகிறாரோ அவரை பின் தொடர்ந்து செல். வயிற்றுவலி தீரும்’’ என தெரிவித்தார். மறுநாள் காலையில் வெள்ளைப்பன்றி (வராகம்) ஒன்று கண்ணில் பட்டது. தீர்த்தரும் அதை பின்தொடர, அது இத்தலத்திலுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலுக்குள் சென்று மறைந்தது. இங்கு வழிபட்ட தீர்த்தருக்கு வயிற்றுவலி மறைந்தது. வராக வடிவில் காட்சியளித்ததால் இத்தலம் ‘வரகூர்’ எனப்பட்டது. பழமையான இக்கோயில் முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது.
 ஒருமுறை கிருஷ்ணர் காட்சியளித்த போது அவருடன் வந்த சத்தியபாமா, ‘‘ தீர்த்தரே! கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய திருவிளையாடலை கீர்த்தனையாக பாடுவீராக’’ என கட்டளையிட்டார். தீர்த்தரும் ‘ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி’ என்னும் பெயரில் கீர்த்தனைகள் பாடினார். நாராயண கவிராயர் என்பவர் ‘ஸ்ரீகிருஷ்ண சிக்யோத்ஸவம்’ என்னும் பாடலை இங்கு பாடினார். ‘சிக்யோத்ஸவம்’ என்பதற்கு ‘உறியடி திருவிழா’ என்பது பொருள்.
 இங்குள்ள மூலவரின் பெயர் லட்சுமி நாராயணர். உற்ஸவர் பெயர் வெங்கடேசப் பெருமாள். துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடியை பிரசாதமாக தருகின்றனர். உடல் நலம் பெற பக்தர்கள் இதைச் சாப்பிடுகின்றனர்.  
 குழந்தை வரம் வேண்டுபவர்கள் மூலவரின் பாதத்தில் வைத்து பூஜித்த வெள்ளிக்காப்பை அணிகின்றனர். குழந்தை பிறந்ததும் காணிக்கையாக அதை செலுத்துகின்றனர். நினைத்தது நிறைவேற அங்கப்பிரதட்சணம் செய்வதோடு, பெருமாளின் கையிலுள்ள வெள்ளிக்குடத்தில் வெண்ணெய் நிரப்புகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ பாடல்களை பக்தர்கள் பாடி வழிபடுகின்றனர்.    
எப்படி செல்வது?
தஞ்சாவூர்– திருவையாறு சாலையில் 10 கி.மீ துாரத்தில் கண்டியூர். அங்கிருந்து நடுக்காவேரி சாலையில் 13 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar