பதிவு செய்த நாள்
05
செப்
2021
07:09
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், சனி மகா பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.கருவடிக்குப்பத்தில், பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆவணி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.மகா பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, தேவசேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் செய்திருந்தனர்.