Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் ஆவணி ... அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் ஆவணி விழா அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா கடும் கட்டுப்பாடுகள்
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா கடும் கட்டுப்பாடுகள்

பதிவு செய்த நாள்

06 செப்
2021
11:09

 திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது, கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த கூட்டத்தில், எஸ்.பி., சஷாங் சாய், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, தாராபுரம் சப் கலெக்டர் ஆனந்த்மோகன், ஆர்.டி.ஓ., ஜெகநாதன், கீதா உள்ளிட்டோர், விழா நடைமுறை குறித்து பேசினர்.கலெக்டர் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவை, பொது இடங்களில் கொண்டாட அனுமதியில்லாத சூழலில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடலாம்.


சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபராக சென்று, அருகில் உள்ள நீர்நிலையில் சிலையை கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.தனிநபர்களுக்கு மட்டும் அனுமதி பொருந்தும்; பொது அமைப்புகள், சதுர்த்தி விழா கொண்டாடுவது முழுவதும் தடை செய்யப்படுகிறது. தனிநபர்கள், வழிபட்ட சிலைகளை, அருகில் உள்ள கோவிலின் அருகே வைத்துச்செல்ல அனுமதிக்கப்படுகிறது.ஹிந்து அறநிலையத்துறை மூலம், சிலைகளை கரைக்க உரிய ஏற்பாடு செய்யப்படும். அனுமதி தனிநபருக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், மேற்கண்ட வழிமுறையை மீறுபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விழாவுக்காக, பொருட்கள் வாங்க செல்லும் மக்கள், முககவசம் அணிந்து சென்றுவர வேண்டும். வெளியே வரும் போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதை, சார் அலுவலர்கள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar