Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறுபடை வீடும் ஓரிடத்திலே... ஸ்ரீ கிருஷ்ண நாமாவளி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிப்லன் பரசுராமர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2021
01:09


மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி அருகிலுள்ள சிப்லன் குன்றின் மீது மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் கோயில் உள்ளது. இந்த தலத்தை பரசுராம் அல்லது பெதி என்கின்றனர்.
 மேய்ச்சல் நிலமான இப்பகுதியில் புதர் ஒன்றில் பசு ஒன்று தினமும் பால் சுரந்து வந்தது. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பரசுராமர் குறிப்பிட்ட இடத்தில் சுயம்பு வடிவில் புதைந்திருப்பதாக தெரிவித்தார். இதன் பின்னர் இப்பகுதியினர் சிலையை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். குன்றின் மீது கட்டப்பட்ட கற்கோயில் இது. படிகள் மீதேறி கோயிலுக்கு செல்ல வேண்டும்.
18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த பிரம்மேந்திர சுவாமிகள் திருப்பணி செய்து கோயிலை புதுப்பித்தார். மூலவர் பரசுராமருடன் பிரம்மா, விஷ்ணுவும் கருவறையில் நின்ற கோலத்தில் உள்ளனர். இது எங்கும் காணமுடியாத அரிய தரிசனமாகும். கைகளில் வில், அம்பு, கோடரியை ஏந்தியபடி ‘லாப முத்திரை’ காட்டியபடி பரசுராமர் உள்ளார். பிரம்மா, விஷ்ணுவும் நான்கு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியுள்ளனர்.  மராட்டிய மன்னர் வீரசிவாஜி இங்கு அடிக்கடி தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு அருகில் வசிஷ்தி நதி ஒடுகிறது. படகு சவாரியும் இதிலுண்டு. குன்றில் இருந்து காண்போரின் கண்களுக்கு நதி இனிமை சேர்க்கிறது. இத்தலத்தை கொங்கன் இனத்தவர்கள் ‘பரசுராம் பூமி’  என்கின்றனர்.
 வலம்புரி விநாயகர், ஹனுமன், கங்காதேவி சன்னிதிகள் உள்ளன. விருப்பம் நிறைவேற பரசுராமரின் தாயான ரேணுகா தேவிக்கு வளையல் காணிக்கை செலுத்துகின்றனர். கோயிலுக்குள் ‘பரசுராம் பான கங்கா’ என்னும் குளம் உள்ளது. இதனை பரசுராமர் தன் வில்லால் உருவாக்கியுள்ளார். பாவத்தில் இருந்து விடுபட இதன் நீரை பக்தர்கள் தலையில்
தெளிக்கின்றனர். இயற்கை வளம் மிக்க பகுதி என்பதால் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். . தங்குவதற்கு ஓட்டல்கள் உள்ளன. மும்பையிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
எப்படி செல்வது
* மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில்(என்.எச்.66)  238 கி.மீ.,
* புனேயில் இருந்து 232 கி.மீ.,
* சதாராவில் இருந்து 121 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar