பதிவு செய்த நாள்
17
செப்
2021
04:09
சென்னை:சக்தி பீட யாத்திரை ரயிலை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.
இந்த ரயில் வரும் நவ., 16ல் மதுரையில் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாகச் செல்லும். இந்த யாத்திரையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், மாணிக்யம்பா சக்தி பீடம், புருஹூதிகா தேவி கோவில்; ஒடிசா மாநிலம், புரி லிங்கராஜ் கோவில்; அசாம் மாநிலம், காமாக்கியா தேவி கோவில், கோல்கட்டா கங்காசாகர் மற்றும் காளிகாட் காளி தேவி கோவிலுக்கு சென்று வரலாம். மொத்தம் 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம். முன்பதிவிற்கு, சென்னை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680; மதுரை - 82879 31977; திருச்சி - 82879 31974; கோவை அலுவலகத்தை, 82879 31965 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், www.irctctourism.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.