பழநியில் நாள் முழுவதும்அன்னதான திட்டம் மீண்டும் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2021 09:09
பழநி: பழநி, மலைக் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் நேற்று (செப். 20) மீண்டும் துவங்கப்பட்டது. பழநி மலைக்கோயிலில் 2002ல் தமிழக முதல்வரின் அன்னதான திட்டம் தினமும் 100 பேருக்கு வழங்கும் வகையில் துவங்கப்பட்டது.
அதன்பின் 2012 செப்.13ல் நாள் முழுவதும் அன்னதானம் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. 2020ல் மார்ச் முதல் கொரோனா தொற்று ஊரடங்கால் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அன்னதான திட்டமும் கடந்த ஆண்டு செயல்படுத்தப் படவில்லை. பின்னர் செப்.1 முதல் தினமும் 3 ஆயிரம் பேருக்கு எலுமிச்சை, தக்காளி சாதம் பொட்டலமாக வழங்கப்பட்டு வந்தன.தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து நேற்று மலைக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் மீண்டும் துவங்கியது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைப்படி சமூக இடைவெளியை கடைபிடித்து ஒரு பந்திக்கு 100 பேர் வீதம் காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.