Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் கோவிலில் திருத்தேர் ... உப்பிலிபாளையம் அகத்திய மகரிஷி கோவிலில் கும்பாபிஷேகம் உப்பிலிபாளையம் அகத்திய மகரிஷி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
400 ஆண்டு முந்தைய சதிக்கல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
400 ஆண்டு முந்தைய சதிக்கல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

21 செப்
2021
10:09

 திருச்சுழி : திருச்சுழி அருகே புரசலுாரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது. அந்த ஊரை சேர்ந்த தேவாங்கர் கலை கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தகவல் அறிந்து கள ஆய்வு செய்தபின் ராஜகுரு கூறியதாவது:இந்த சிற்பம் உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு வைத்த சதிக்கல் ஆகும். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை சங்க காலம் முதல் தமிழ்நாட்டில இருந்துள்ளது.

போரிலோ, வேறு காரணங்களிலோ கணவன் இறந்த பின் அவனுடனோ, தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு நினைவு சின்னங்கள் அமைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இவற்றை மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்று அழைப்பர். இந்த சதிக்கல் 2 அரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. ஆண் இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டும், பெண் இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டும் அமர்ந்த நிலையில் உள்ளனர்.  ஆண் இடது கையில் கட்டாரி எனும் குத்துவாளையும், பெண் வலது கையில் பூச்செண்டையும் ஏந்தியுள்ளனர். தலையில் கொண்டை ஆணுக்கு வலப்புறமும் பெண்ணுக்கு இடப்புறமும் சரிந்துள்ளது. இருவரும் நீண்ட காதுகளுடன், கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் அணிந்து உள்ளனர். சிற்பத்தின் மேல்பகுதி கபோதம், கண்டம், கலசங்கள் ஆகிய பகுதிகளுடன் கோயிலின் சாலை விமானம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்பத்தின் கீழ்பகுதியில் காலை தொங்க விட்டு அமர்ந்த நிலையில் ஊஞ்சலாடும் பெண்ணின் சிறிய சிற்பம் உள்ளது. இந்த சிற்பம் 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இதே ஊரில் ஏற்கனவே 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar