Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ... கோனியம்மன் கோவிலில் இலையில் அன்னதானம் கோனியம்மன் கோவிலில் இலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
எழுத்தின் அளவு:
குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

பதிவு செய்த நாள்

21 செப்
2021
04:09

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள முக்கடல் சங்கமத்தில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குமரி மாவட்டஇந்து திருத்தொண்டர் பேரவை நடத்தும் முக்கடல் சங்கமம் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது. பரசுராமர் விநாயகர் கோயில் முன்பக்தர்கள் திரண்டு இருந்தனர். பஞ்சசங்கு நாதம் ஒலிக்கமாதாபிதாகுரு ஆசி வேண்டல் குலதேவதை, இஷ்டதேவதை, கிராம தேவதை வேண்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

பிறகு அணையாதீபம் ஏற்றுதல் மற்றும் கையிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. சப்தகன்னிகள்  அடியார்களுக்கு எதிர்சேவை நடந்தது. உமாமகேஸ்வர சிவாச்சாரியார் சங்கல்ப பூஜைக்கு பின் சமுத்திர அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் தலைமைதாங்கினார். பெருங்குளம் செங்கோல் ஆதீனம் தேசிக சத்தியஞான பரமாச்சாரியசுவாமிகள், நாகப்பட்டினம் திருப்புகலூர் திருமடம் வேளாக்குறிச்சி ஆதீனம் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முக்கடல் சங்கம மகாசமுத்திர தீர்த்த ஆரத்தியை தொடங்கி வைத்தனர்.

போலீஸ்குவிப்பு தள்ளு முள்ளு : கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று காலை வரை நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. ஏ ற்பாட்டாளர்களின் தொடர் முயற்சியின் பேரில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டு கடற்கரைக்கு செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பினர். நேரம் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். லேசானதள்ளு முள்ளு நடந்தது. இதனை தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி பக்தர்கள் கடற்கரைக்கு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar