கோவில் திருவிழாவிற்கு வந்த யானை மிரண்டது: மக்கள் பீதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2021 05:09
பாலக்காடு:கோவில் திருவிழாவுக்கு வந்த யானை மிரண்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற திருவில்வாமலை வில்வாதிரிநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் புரட்டாசி மாதம் நிறமால உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று முன்தினம் நடந்தன. திருவிழாவையொட்டி ஐந்து யானைகள் அணிவகுப்புடன் மூலவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தன. இந்நிகழ்ச்சிக்காக வந்த பாணஞ்சேரி பரமேஸ்வரன் என்ற யானை மதியம் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் திடீரென மிரண்டனர். அலங்கரித்து மேற்கு நடையின் வடக்கு பகுதியில் நின்று கொண்டிருந்த யானையை பாகன் தந்த்தை பிடித்து பின்னால் மாற்ற முயலுவதின் இடையே மிரண்டனர். தொடர்ந்து அருகில் வைத்திருந்த வாத்தியங்களை அடித்து நொறுக்கியதோடு யானை மீது அமர்ந்து இருந்த பாலக்காடு குனிச்சேரியை சேர்ந்த சுவாமிநாதனை 50, குடைந்து தறையிட்டு தாக்க முயன்றனர். ஆனால் மக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து யானையின் கவனம் திசை திரும்பியதால் அவர் தப்பியோடினார். சிறு காயங்கள் ஏற்பட்ட அவரை உடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து யானைப் படை உறுப்பினர்களும் பாகன்மார்களும் சேர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது மேற்கு நடை முன் பொருத்தப்பட்டிருந்த குத்துவிளக்கினை அடியோட பிழுது வீசி எறிந்தனர். முக்கால் மணி நேரம் நீண்ட முயற்ச்சி பலனாக யானையை கயிற் மற்றும் சங்கிலியை பயன்படுத்தி கட்டுப்படுத்தினர். தொடர்ந்து சாந்தமான யானையை மாலையுடன் திரும்பி கொண்டு சென்றனர். அதேநேரத்தில் விழா தடையின்றி நடந்தனர்.