Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாள் முழுவதும் அன்னதானம் தயார் ... பச்சை நிறமாக மாறிய திருத்தணி சரவண பொய்கை! பச்சை நிறமாக மாறிய திருத்தணி சரவண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை: 1,000 பக்தர்கள் தடுத்து நிறுத்தம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2012
10:06

ஜம்மு: அமர்நாத் யாத்திரை சென்ற, 1,000 பக்தர்களை ஜம்முவில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பாதுகாப்பான, சுகமான, போக்குவரத்து நெரிசலற்ற பயணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் உள்ள பனிலிங்க தரிசனத்திற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். அவர்களை மிகவும் பாதுகாப்பாக, அணி அணியாக போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் அழைத்துச் சென்று வருகின்றனர். சிலர் நடந்தும், சிலர் குதிரை மீது அமர்ந்தும் பயணத்தை தொடர்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், அமர்நாத் நோக்கிச் செல்லும் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டு, அணி அணியாக அனுப்பப்படுகின்றனர். இதனால், பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல முடிகிறது. இவ்வாறு செல்லும் போது, இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி நிலச்சரிவு அபாயம் ஏற்படும் பகுதிகளான நாஸ்கிரி மற்றும் ஷிதானி நல்லா பகுதிகளில், பக்தர்கள் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தான், பக்தர்கள் அணி அணியாக அனுப்பப்படுகின்றனர். நேற்று, காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்கான நுழைவுப் பகுதியில், 1,000 பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar