திருத்தங்கல் பெருமாள் கோயில் ஆனி விழா இன்று துவங்குகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2012 10:06
வெம்பக்கோட்டை: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு ஆனி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் தினமும் பெருமாள், செங்கமலத்தாயார் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிகின்றனர். ஒன்பதாம் நாள் விழாவான ஜூலை 6 காலை தேரோட்டம் நடக்கிறது.