அமாவாசைக்கு தடை: அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2021 10:10
ராமேஸ்வரம்: புரட்டாசி அமாவாசைக்கு தடை விதித்ததால், நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அக்.,6 ல் புரட்டாசி மகாளய அமாவாசை யொட்டி பக்தர்கள் கூடுவதை தவிர்க்க அக்.,5, 6ல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசிக்க, அக்னி தீர்த்த கடலில் நீராட ராமநாதபுரம் கலெக்டர் தடை விதித்தார். மேலும் வழக்கமாக தமிழக அரசின் தடையால் அக்., 8, 9, 10ல் கோயிலில் தரிசிக்க அனுமதியில்லை. இந்த வாரத்தில் இரு நாட்கள் (திங்கள், வியாழன்) மட்டுமே கோயிலில் தரிசிக்க முடியும் என்பதால், நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர். பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.