பதிவு செய்த நாள்
05
அக்
2021
10:10
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், தங்கத்தேர் சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற, வெள்ளி மற்றும் தங்கத்தேர் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.மேலும், பிரம்மோற்சவம், கிருத்திகை, படித் திருவிழா ஆகிய நாட்களில், கோவில் சார்பில், வெள்ளி மற்றும் தங்கத் தேரில் உற்சவர் முருகப் பெருமான், வீதியுலா வருவார்.இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன் வெள்ளி மற்றும் தங்கத் தேர் பழுதடைந்தது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் சில நாட்களுக்கு முன், முருகன் கோவிலுக்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர்.தற்போது தங்கத்தேர் சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.