பதிவு செய்த நாள்
05
அக்
2021
10:10
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பெருந்தேவி தாயாரை, பல்லக்கில் சுமந்து செல்வதற்காக 13.35 லட்சம் ரூபாயில் தயார் செய்யப்பட்ட வெள்ளி தடிகளை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டன் சுவாமிகள் வழங்கினார்.காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது.வரதராஜ பெருமாளை வணங்கிவிட்டு, பெருந்தேவி தாயாரை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.
கோவில் திருவிழா காலங்களில், கோவில் உள் மாடவீதிகளில் வலம் வந்து, பெருந்தேவி அருள்பாலிப்பார்.அவரை துாக்கி வர பயன்படுத்தப்படும் மரத்தடி புதிதாக செய்யப்பட்டு, அதில் 13.35 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளி தகடு பதிக்கப்பட்டுள்ளது.கலை நுட்பத்துடன் செய்யப்பட்ட இந்த வெள்ளி தடிகளை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், வரதர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமி ஆசிரமத்தில், நேற்று காலை வெள்ளி தடிக்கு பூஜை நடைபெற்றது.பின் பக்தர்கள், அங்கிருந்து வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, ஊர்வலமாக அவற்றை எடுத்துச் சென்றனர்.