பதிவு செய்த நாள்
05
அக்
2021
11:10
புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், பிரதோஷ சிறப்பு பூஜை நேற்று நடந்தது.கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை, புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் நந்தி பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, தேவசேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் செய்தனர்.