பதிவு செய்த நாள்
05
அக்
2021
11:10
மேட்டுப்பாளையம்: பிரதோஷத்தை முன்னிட்டு, வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து வெள்ளிங்கிரி ஆண்டவர மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, எலுமிச்சை, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்தனர். தலைமை பூசாரி துரைசாமி, உதவி பூசாரிகள் ரஞ்சித்குமார், மனோஜ் குமார் ஆகியோர் பூஜைகள் செய்தனர்.