பதிவு செய்த நாள்
05
அக்
2021
01:10
பொள்ளாச்சி, உடுமலையிலுள்ள சிவன் கோவில்களில், புரட்டாசி சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.மாதம் இருமுறை வரும் பிரதோஷ தினம், சிவபெருமானுக்கு உகந்த தினமாக வழிபடப்படுகிறது.இந்நாட்களில், மாலை, 4:30 - 6:00 மணி பிரதோஷ காலத்தில், சிவபெருமான் மற்றும் நத்திதேவரை வழிபடுதல், அபிேஷக ஆராதனைகள் செய்தல், தேவி சமேத இறைவனை திருவீதியுலா அழைத்து செல்லுதல், தேவார, திருவாசகம் பாடி வழிபடுதல் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிலும், புரட்டாசி மாதத்தில், திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம், புரட்டாசி சோமவார பிரதோஷம் என, ஆன்மிக பெரியோர்களால் விசேஷமாக குறிப்பிடப்படுகிறது. நேற்று, கோவில்களில் புரட்டாசி சோமவாரப் பிரதோஷ விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகளில் சிவபெருமான் அருள்பாலித்தார்.ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், திப்பம்பட்டி மலையாண்டி ஈஸ்வரர் உடனுறை சக்தி கோவில், தேவம்பாடி கங்கா பார்வதி உடனமர் அமணீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், நேற்று மாலை, பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரசன்ன விநாயகர் கோவிலில், விஸ்வநாத சுவாமி சன்னதியில், நேற்று மாலை, சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, விஸ்வநாதரை பக்தர்கள் தரிசித்தனர். இதே போல், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, சிவன் கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில், நந்திதேவனுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள, காசிவிஸ்வநாதருக்கு நேற்று புரட்டாசி மாத பிரதோஷபூஜை நடந்தது. பூஜையில், மாலை, 5:00 மணிக்கு, பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. - நிருபர் குழு -