தனிப்பட்ட கோயில் நிர்வாகத்தில் தலையிட அரசுக்கு அதிகாரமில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2021 03:10
சென்னை : கோவில் நகைகளை உருக்குவதற்கோ சேமிப்பதற்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை. அதை முறையாக சட்ட ரீதியாக செய்யுங்கள் என தமிழக பா.ஜ. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி வங்கிகளில் சேமித்து அதில் கிடைக்கும் வட்டியை கோவில்களின் கணக்கில் வரவு வைப்பது தான் சட்டம். அனைத்து கோவில்களின் தங்கத்தையும் சேர்த்து மொத்தமாக உருக்கி சேமித்து அதில் கிடைக்கும் வட்டி வருவாயை மற்ற கோவில்களுக்கு செலவிடுவோம் என்று சொல்வது சட்டப்படி முறையல்ல. இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அல்லது ஹிந்து சமய அறநிலைய துறைக்கு அதிகாரமில்லை. மக்களின் காணிக்கைகளை பயன்பாடற்றது என அமைச்சர் கூறுவது முறையல்ல. வேண்டுதல் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அசைத்து பார்க்கும் முயற்சியை கைவிடுங்கள். அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விட்டு கபாலி கோவிலுக்கோ அல்லது ரங்கநாதர் கோவிலுக்கோ பக்தர்கள் செல்வரா? அதேபோலவே காணிக்கைகளும். தங்கத்தை உருக்கி சேமித்து அதன் வழியே வட்டி பெற எந்த ஆட்சேபனையும் இல்லை. அதை முறையாக சட்டரீதியாக நியாயமாக செய்யுங்கள் என்று தான் சொல்கிறோம். அரசுக்கோ அறநிலையத் துறைக்கோ தனிப்பட்ட கோவில் நிர்வாகத்தில் சொத்துக்களில் தலையிட அதிகாரமில்லாத நிலையில் இந்த நடவடிக்கை மேலும் பல தவறுகளுக்கு முன்னுதாரணமாகி விடக்கூடாது.இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.