Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவனந்தபுரம் நவராத்திரி பூஜைக்கு ... திருப்பதி ஏழுமலையான் திருக்குடை உற்ஸவம் தொடக்கம் திருப்பதி ஏழுமலையான் திருக்குடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பித்ருக்களுக்கு தர்ப்பணம் தரும் புரட்டாசி மகாளய அமாவாசை நாள் இன்று!
எழுத்தின் அளவு:
பித்ருக்களுக்கு தர்ப்பணம் தரும் புரட்டாசி மகாளய அமாவாசை நாள் இன்று!

பதிவு செய்த நாள்

06 அக்
2021
08:10

முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ஆண்டு முழுதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாத அமாவாசை முன்னோர் பூமிக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இதில், பக்ஷம் என்பது 15 நாட்களை குறிக்கும். புரட்டாசி பவுர்ணமியில் துவங்கி, அமாவாசை உள்ள 15 நாட்களே மகாளய பட்ச காலம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற ஆன்மிக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர், நமக்கு ஆசி வழங்குவதற்காகவே, பிதுர் லோகத்தில் இருந்து நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருவர் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மகாளய பட்சம், செப்., 21ம் தேதி துவங்கியது.மகாளய அமாவாசைமகாளய அமாவாசை அன்று தான், நம் முன்னோர்கள் வீடுதேடி வந்து ஆசிர்வதிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

அன்று பித்ருக்களுக்கு திதி கொடுப்பதை, பரம்பரை பரம்பரையாக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அத்தகைய சிறப்பு மிக்க மகாளய அமாவாசையில், தமிழகம் முழுதும் புண்ணிய நதிகள், சமுத்திரம் போன்ற இடங்களில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்து, தானம் செய்வது வழக்கம். அவ்வாறு திதி கொடுக்க தவறினால், முன்னோர் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, வாழ்க்கையில் முன்னேற்றம் போய்விடும் என்பதும் மக்கள் நம்பிக்கை.அத்தகைய சிறப்பு மிக்க மகாளய அமாவாசை இன்று தான். இந்தாண்டும்கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அவரவர் வீடுகளில் முன்னோருக்கு திதி கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar