Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பித்ருக்களுக்கு தர்ப்பணம் தரும் ... சிவன்மலை ஆண்டவர் கோயிலில் நெல் வைத்து வழிபாடு சிவன்மலை ஆண்டவர் கோயிலில் நெல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் திருக்குடை உற்ஸவம் தொடக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் திருக்குடை உற்ஸவம் தொடக்கம்

பதிவு செய்த நாள்

06 அக்
2021
09:10

சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட உள்ள 11 வெண்பட்டுக் குடைகளுக்கு சென்னை கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அக். 10ல் திருமலையில் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலைகள் தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள் என, இரண்டு வகையான மங்கலப் பொருட்கள், தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் திருமலை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

திருப்பதி பிரம்மோற்ஸவத்தின்போது, திருமலை ஏழுமலையானுக்கு, ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், ஆண்டுதோறும் 11 வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.இந்த ஆண்டுக்கான திருக்குடை உற்ஸவம், அக். 3ல் யாக பூஜைகளுடன் துவங்கியது.சென்னை, பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில், 11 திருக்குடைகளுக்கும் நேற்று காலை 11:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, விஸ்வ ஹிந்து வித்யாகேந்திரா இணைப் பொதுச் செயலர் கிருஷ்ணமாச்சாரி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் செல்லமுத்து, தமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின்ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, திருக்குடை ஊர்வலம் தவிர்க்கப்பட்டுள்ளது.அக்., 9ல், திருச்சானுார் தாயார் கோயிலில் இரண்டு திருக்குடைகளும், அக்.10ல் திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒன்பது திருக்குடைகளையும், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி சமர்ப்பிக்க உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar