பதிவு செய்த நாள்
06
அக்
2021
11:10
தஞ்சாவூர்,- கொரானா பரவல் காரணமாக, நதிகளில் புனித நீராடவும், திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டப படித்துறையில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில், ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, ஐயாறப்பரை வழி பட்டுச் செல்வது வழக்கம். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, திருவையாறு பகுதியில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் பொதுமக்கள் நீராட, தர்ப்பணம் கொடுக்க அதிகாரிகள் தடைவிதித்து உத்தர விட்டனர். இதையடுத்து, புரட்டாசி மாத மஹாளய அமாவாசையான இன்று(06ம் தேதி) பொதுமக்கள் யாரும் வராததால், காவிரி புஷ்ப மண்டப படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் தனியார் இடங்களில் பொதுமக்கள் தர்பணம் கொடுத்து, காவேரி கரை ஓரங்களில் ஆபத்தான நிலையில் இறங்கி நீராடினார். அதேசமயம் அமாவாசையை முன்னிட்டு, காய்கறி பழங்கள் உள்ளிட்டவைகளை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த தரை வியாபாரிகள் அதிக அளவில் விற்பனை இல்லாததால் காய்கறிகள் வீணாகி போவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.