Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை ஆண்டவர் கோயிலில் நெல் ... அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாடு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாளய அமாவாசை: வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை
எழுத்தின் அளவு:
மஹாளய அமாவாசை: வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை

பதிவு செய்த நாள்

06 அக்
2021
11:10

தஞ்சாவூர்,- கொரானா பரவல் காரணமாக, நதிகளில் புனித நீராடவும், திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டப படித்துறையில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில், ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, ஐயாறப்பரை வழி பட்டுச் செல்வது வழக்கம். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, திருவையாறு பகுதியில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் பொதுமக்கள் நீராட, தர்ப்பணம் கொடுக்க அதிகாரிகள் தடைவிதித்து உத்தர விட்டனர். இதையடுத்து, புரட்டாசி மாத மஹாளய அமாவாசையான இன்று(06ம் தேதி) பொதுமக்கள் யாரும் வராததால், காவிரி புஷ்ப மண்டப படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் தனியார் இடங்களில் பொதுமக்கள் தர்பணம் கொடுத்து, காவேரி கரை ஓரங்களில் ஆபத்தான நிலையில் இறங்கி நீராடினார். அதேசமயம் அமாவாசையை முன்னிட்டு, காய்கறி பழங்கள் உள்ளிட்டவைகளை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த தரை வியாபாரிகள் அதிக அளவில் விற்பனை இல்லாததால் காய்கறிகள் வீணாகி போவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar