Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாரம் அவ்வை திடலில் நவராத்திரி விழா: ... புதுச்சேரி கடற்கரையில் மகாளய அமாவாசை தர்ப்பணம் புதுச்சேரி கடற்கரையில் மகாளய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது: உயர் நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது: உயர் நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

07 அக்
2021
11:10

சென்னை : கடவுள் பெயரில், தனியார் அறக்கட்டளை, தனிநபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த, வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எதிர்காலங்களில் உற்சவங்களை நடத்த, ஜீயர்கள், ஸ்தலத்தார்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என, கூறியிருந்தார்.

இம்மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், சவுரிராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நவ., 10 முதல், 19ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை; இதில், கோவில் நிர்வாக அதிகாரி தலையீடு எதுவும் இல்லை; நிகழ்ச்சிக்காக, பல சபாக்கள் சார்பில், பணம் வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடவுள் பெயரில், தனி நபர்கள், தனியார் அறக்கட்டளைகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது என, நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். உடனே, தொலைவில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, நன்கொடை வசூலிப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், பாரம்பரியமாக உள்ள நடைமுறையில் குறுக்கீடு செய்ய மாட்டோம். சட்டவிரோத அம்சங்கள் ஏதேனும் சுட்டிக் காட்டப்பட்டால், நீதிமன்றம் தலையிடும் என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar