பதிவு செய்த நாள்
07
அக்
2021
05:10
தொண்டாமுத்தூர்: ஈஷாவில் உள்ள லிங்கபைரவியில் நவராத்திரி திருவிழா இன்று துவங்குகிறது. ஈஷாவில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நவராத்திரி விழா, இன்று துவங்கி, வரும், 15ம் தேதி வரை, நடக்கவுள்ளது. இதையொட்டி, வரும், 8,9,10,12,15ம் தேதி ஆகிய நாட்களில், சம்ஸ்க்ரிதி மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், லிங்கபைரவி யூடியூப் சேனலில், மாலை, 6.45 மணிக்கு நேரலை ஒளிபரப்பு செய்யப்படும். இதில், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வயலின் இசை போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
வரும், 9, 10, 15 ஆகிய தேதிகளில், மாலை, 5:30 மணிக்கு நடக்கும் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை பார்வையிட http://isha.sadhguru.org/in/en/events/annual-events/navratri என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திங்கள் முதல் வியாழன் வரை, காலை, 10:30 முதல் மாலை, 4:30 மணி வரை மட்டுமே ஈஷாவிற்கு பக்தர்கள் நேரில் வருகை தர முடியும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ஈஷாவிற்கு வர அனுமதி இல்லை.