பதிவு செய்த நாள்
08
அக்
2021
01:10
புதுச்சேரி: புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சத சண்டி மகா யாகம் நேற்று காலை தொடங்கியது.புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி, கடந்தாண்டு முதல் நவராத்திரி காலத்தில் 10 நாட்களுக்கு சத சண்டி மகா யாகம் நடத்தி வருகிறது.இந்த ஆண்டிற்கான சத சண்டி மகா யாகம், புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது.முதல் நாளான நேற்று, அம்மன் துர்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 6:00 மணிக்கு கோபூஜையுடன் துவங்கியது. சண்டி ஹோமம், சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடு பூஜை, தம்பதியர் பூஜை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்றது.இந்த பூஜையில் சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை மூலமந்திர ஜபம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், இசை கச்சேரி, மஹா தீபாராதனை நடைபெற்றது.இதேபோல், வரும் 15ம் தேதி வரை தினசரி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.இந்த பூஜைகள் மற்றும் யாகத்தை, கீதாராம சாஸ்திரி வழிகாட்டுதலில், அசோக் சாஸ்திரி நடத்தி வருகிறார்.