வடமதுரை: அய்யலூர் தீத்தாகிழவனூர் கோவில் தோட்டம் பேசும் பழனிஆண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன் கோயிலில் ஆண்டு விழா நடந்தது. தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 48 வகை அபிஷேகங்கள், ஆராதனை, அன்னதானம் நடந்தது. கோயில் நிர்வாகி செந்தில்நாதன் மற்றும் விழா குழுவினர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.