புதுச்சேரி : முதலியார்பேட்டை வன்னியப்பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நேற்று நடந்தது. தலியார்பேட்டை வன்னியப்பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு சக்கரத் தாழ்வாருக்கு நேற்று காலை 9.30 மணிக்கு கும்பஸ்தாபனமும், 10.30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 7 மணிக்கு சுதர்சன ஹோமம், சிறப்புத் திருமஞ்சனம், பூர்ணாஹூதி நடத்தப் பட்டது.