திருப்பதி பிரம்மோற்சவம்: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2021 04:10
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிநடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி பல்லக்கில் ஆண்டாள் மாலை சூடிக் கொண்டு எழுந்தருளினார். பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தத்தை அரக்கர்களுக்கு கிடைக்க விடாமல் தேவர்களுக்கு பகிர்ந்தளிக்க மஹாவிஷ்ணு மேற்கொண்ட அவதாரம் மோகினி அவதாரம். தாயாரின் உருவத்தில் மலையப்பசுவாமி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் காலை ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு மலையப்பசுவாமி பல்லக்கில் எழுந்தருளினார். கருட வாகனம் இரவில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய வாகன சேவையான கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.