Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? படிப்பில் சிறக்க மஞ்சள் பூசுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை மழையே கலைவாணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
07:10

 
திருவாரூர் மாவட்டம் கூத்தனுாரில் சரஸ்வதி குடிகொண்டிருக்கிறாள். மாணவர்களுக்கு கருணைமழையாக அருள்புரியும் கலைவாணி மூலவராக உள்ள இக்கோயிலைக் கட்டியவர் ஒட்டக்கூத்தரின் பேரனான ஓவாத கூத்தர்.  
சத்தியலோகத்தில் ஒருநாள் சரஸ்வதிக்கும், பிரம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. ‘‘இந்த சத்தியலோகமே தன்னால் தான் பெருமையடைகிறது’ என்றாள் சரஸ்வதி. அதற்கு பிரம்மாவோ, ‘‘உயிர்களைப் படைக்கும் பிரம்மாவின் மனைவி என்பதால் தான் சரஸ்வதிக்கு பெருமை’’ என மறுத்தார். இந்நிலையில் ஒருவரையொருவர், ‘பூமியில் மனிதனாக பிறக்கக் கடவது’ என சபித்துக் கொண்டனர். அதன்படி சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதிக்கு பகுகாந்தன் என்னும் பெயரில் பிரம்மாவும், சிரத்தை என்ற பெயரில் சரஸ்வதியும் பிறந்தனர். திருமண வயதை அடைந்த அவர்களுக்கு பெற்றோர் வரன் தேடினர். இந்நிலையில் இருவருக்கும் தாங்கள்  யார் என்னும் உண்மை நினைவுக்கு வந்தது. பெற்றோருக்கும் உண்மை தெரிவித்தனர். ரஸ்வதி நல்வழிகாட்ட சிவனைச் சரணடைந்தாள். அவளுக்கு காட்சியளித்த சிவன், ‘‘ சகோதரியாக பிறந்த நீ இப்போது உன் மணாளனை அடைய முடியாது. தனியாக இத்தலத்தில் எழுந்தருளி உன்னிடம் வருவோருக்கு கல்வி வளத்தைக் கொடு’’  என்றார். இதன் பின் இங்கு ஓவாத கூத்தர் என்பவர் கோயில் கட்டினார். தன் தாத்தாவான ஒட்டக்கூத்தரின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணிய இவர் இப்பகுதிக்கு ‘கூத்தனுார்’ எனப் பெயரிட்டு கோயில் கட்டினார். ஒட்டக்கூத்தர் சிலையும் இங்குள்ளது.  
  வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையின் மீது அமர்ந்தபடி கிழக்கு நோக்கி சரஸ்வதி இருக்கிறாள். கைகளில் அட்சர மாலை, சின்முத்திரை, அமிர்த கலசம், ஓலைச்சுவடிகள் உள்ளன. மூன்றாவது கண்ணும் இவளுக்கு இருக்கிறது. நவராத்திரியில் விஜயதசமியன்று இக்கோயிலில் அட்சர அப்பியாசம் என்னும் எழுத்துப்பயிற்சி நடக்கும். தரையில் நெல் பரப்பி அதில் ஓம் என்னும் மந்திரத்தை எழுதச் செய்வர். பெற்றோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றால் குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவர்.  மூலநட்சத்திரம், நவமி திதி, புதன்கிழமையன்று இதைச் செய்து வழிபடலாம்.
இருப்பிடம் : திருவாரூர் – மயிலாடுதுறை வழியில் உள்ள பூந்தோட்டத்தில் இருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ.,
விசேஷ நாட்கள்: சரஸ்வதிபூஜை, விஜயதசமி
நேரம்: காலை 6:00– 12:00 மணி,  மாலை 4;00 – இரவு 9:00 மணி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar