பதிவு செய்த நாள்
13
அக்
2021
10:10
திருப்பதி:திருமலை ஏழு மலையான் கோவிலில் நடந்து வரும், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று, அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருமலையில் ஏழுமலையானுக்கு, வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஆறாம் நாளான நேற்று காலை அனுமந்த வாகன சேவை நடந்தது. பின் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரவில் யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். தாயாரின் வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள்வதும், மலையப்ப சுவாமி வாகனத்தில் தாயார் எழுந்தருள்வதும் பிரம்மோற்சவத்தின் போது வழக்கமாக நடந்து வருகிறது. வாகன சேவைகளில், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.